fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சென்னையில் 1400 கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை ரெடி…! அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி!

Minister vijayabaskar interview over corona

சென்னை:

1,400 படுக்கைகள் கூடிய கொரோனா சிகிச்சை மையம் சென்னையில் அமைக்கப்படுவதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

புளியந்தோப்பில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: 1,400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது.

சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும். சிகிச்சை மையத்தில், சிறப்பு மருத்துவ குழு முழுநேரமும் செயல்படும்.

சென்னையில் கொரோனா சிகிச்சையில் தாமதம் ஏற்படாமல் இருக்க கூடுதலாக 10 இடங்களில் பரிசோதனை செய்யப்படும். காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு சென்னையில் 140 நகர்ப்புற சுகாதார மையங்களில் பரிசோதனை நடத்தப்படும். சமூக பரவல் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close