fbpx
RETamil NewsTechnologyஇந்தியா

சென்ற அக்டோபரில் புதிய ஒரு கோடி வாடிக்கையாளர்களை இணைத்தது ரிலையன்ஸ் ஜியோ – டிராய் தகவல்

கடந்த அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக அளவில் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர்.

இதுபற்றி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் ஒரு கோடி புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது. அதே போல் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் 3 லட்சத்தி 66 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது.

ஆனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனமான வோடோபோன் , ஐடியா நிறுவனங்கள் தங்கள் 73 லட்சத்தி 61 வாடிக்கையாளர்களை இழந்து அதிக அளவில் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட நிறுவனமாக உள்ளது. ஏர்டெல் நிறுவனம் தனது 18 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது. மேலும் டாடா டெலிசர்வீஸஸ் 9 லட்சத்தி 25 ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக டிராய் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close