20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு…..?
சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடி போன்ற சமூக விரோத செயல்களுக்கு தெலைத்தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே இதற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில போலீசாரும் இணைந்து கூட்டுஆய்வுநடவடிக்கைகளைநடத்தினர்இதில்28,200செல்போன்களைசைபர்குற்றங்களைமேற்கொள்ளபயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஇதுதொடர்பாகதொலைத்தொடர்புதுறைக்குதகவல்தெரிவிக்கப்பட்டஇந்த துறையினர் இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்ததில் இந்த செல்போன்கள் மூலம் 20 லட்சம் எண்களை பயன்படுத்திமேற்படிகுற்றங்கள்மற்றும்மோசடிஅரங்கேறியதுஉறுதி செய்யப்பட்டது. இந்த செல்போன் எண்கள் நாடு முழுவதும் பயன்பாட்டில்இருந்தவைஆகும்.இதைத்தொடர்ந்துஇந்த28,200செல்போன்எண்களைஉடனடியாகமுடக்குமாறு தொலைத்தொடர்பு துறைக்கு மத்தியதொலைத் தொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.மேலும் மேற்படி 20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு செய்து, அதில் போலியானவை என கண்டறியப்படும் இணைப்புகளை துண்டிக்குமாறும்கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் உண்மைத்தன்மையை உறுதிசெய்தல் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதி செய்யும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை மற்றும் மாநில போலீசார் இணைந்துஇந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக மோசடி நபர்களின் நெட்வொர்க்கை கூண்டோடு அகற்றுவதையும்,டிஜிட்டல் அச்சுறுத்தல்களில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .