fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

பள்ளிகளில் குறைக்கப்படும் பாடங்கள்…! காரணம் கொரோனா..!

School syllabus may decrease

சென்னை:

கொரோனா எதிரொலியாக தமிழகத்தில் காலதாமதமாக பள்ளிகள் திறப்பக்கப்படுவதால் பாடங்களை குறைக்கத் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று தீவிரத்தின் காரணமாக வழக்கமாக ஜூனில் திறக்கப்படும் பள்ளிகள் ஆகஸ்டில் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பரில் வகுப்புகள் ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.

கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களை நெருக்கமாக அமரவைத்து  வகுப்புகளை நடத்துவது சவலாக இருக்கும் என்பதால் 1 முதல் 5ம் வகுப்பு வரை காலையிலும் 6 முதல் 12 வரை பிற்பகலிலும் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.

இந்த தாமதத்தின் காரணமாக வழக்கமாக பாடங்களை நடத்தி முடித்து உரிய காலத்தில் தேர்வுகள்  வைக்கும் வரும் சவாலானதாக இருக்கும். இத்தகைய சூழலில் தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை கடைபிடிக்கப்பட்டு வரும் முப்பருவ முறையில் மாற்றம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

அதன்படி 1 முதல் 8ம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள முப்பருவ பாடமுறையில் 1 பருவ பாடத்தை கைவிடுவது என பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோன்று வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும்  10  மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படலாம்.

கொரோனா தாக்கத்தால் தற்போது பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags

Related Articles

Back to top button
Close
Close