fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மாஸ்க், சானிடைசர் நீக்கம்…! மத்திய அரசு அறிவிப்பு!

Mask, sanitizer removed from essential list

டெல்லி:

மாஸ்க், சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது.

இந்தியாவில், மார்ச் முதல் கொரோனா பரவத் தொடங்கியது. இதனால், நாடு முழுவதும் மாஸ்க், சானிடைசர் உபயோகிப்பது அதிகரித்தது. மாஸ்க், சானிடைசர் தேவையின் காரணம் காட்டி  பல இடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.

அதை தடுக்கும் நோக்கில் மாஸ்க் மற்றும் சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களை  ஜூன் வரைக்கும் மத்திய அரசு  அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்த்தது.

தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3 -வது இடத்தில் உள்ளது. கொரோனாவை தடுக்க  மாஸ்க், சானிடைசர் உபயோகிக்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மாஸ்க், சானிடைசரை மத்திய அரசு நீக்கியுள்ளது.

2 பொருட்களுக்கும் தட்டுப்பாடு இருப்பதாகவோ, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எதுவும் எழவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஜூலை 1 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close