fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

எத்தியோப்பியாவில் விமான விபத்து – பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 157 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அது ரேடாரில் இருந்து மறைந்துள்ளது. இந்நிலையில் அந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் , அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எத்தியோப்பி பிரதமர் அலுவலகம் உறுதிசெய்துள்ளது.


எத்தியோப்பியாவின் ஏர்லைன்ஸ் விமானநிலையத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 149 பயணிகளுடனும் , 8 உழியர்களுடனும் புறப்பட்டுள்ளது. எந்தவித கோளாறும் இல்லாமல் புறப்பட்ட அந்த விமானம் விபத்துக்குள்ளாகி அனைத்து பயணிகளும் ஊழியர்களும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எத்தியோப்பிய பிரதமர் அபிய் அஹமத் அந்நாட்டு மக்கள் சார்பிலும், அரசின் சார்பிலும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close