fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

நீட் தேர்வில் மாணவர்கள் பாதிக்கப்பட்டதற்கு தமிழக அரசு தான் காரணம் – சிபிஎஸ்இ

நீட் தேர்வு வினாத்தாளில் நடந்த குளறுபடிக்கு தமிழக அரசு நியமித்த மொழிபெயர்ப்பாளர்கள் தான் காரணம் என சிபிஎஸ்இ குற்றம்சாட்டியுள்ளது.

நீட் தேர்வில், தமிழில் மொழியில் வழங்கப்பட்ட வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தது.

இதனால் தமிழில் மொழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 196 மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் அகில இந்திய அளவில் மருத்துவப்படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் 16ம் தேதி தனியார் கல்லூரிகளில் நடைபெறவிருந்த கலந்தாய்வும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரையில் கலந்தாய்வு நடக்காது என்றும் புதிதாக தரவரிசைப்பட்டியலை தயார் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாளில் கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதற்கு தமிழக அரசு தான் காரணம் என்று சிபிஎஸ்இ குற்றம்சாட்டியுள்ளது.

தமிழக அரசு பரிந்துரைத்த மொழிப்பெயர்ப்பாளர்கள் தான் இந்தி மற்றும் ஆங்கில கேள்விகளை தவறாக மொழி பெயர்த்துள்ளனர் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close