fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஇந்தியாதமிழ்நாடு

30 பாசஞ்சர் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம்…! ரயில்வே வாரியம் உத்தரவு!

In tamilnadu 30 Passenger trains changed as express trains

சென்னை:

தமிழகத்தில் 30 பாசஞ்சர் ரயில்களை உடனடியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது கொரோனா. இந்தியாவில் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழகத்திலும் பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது.

ஆகையால் இன்று முதல் 12 நாட்கள் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாகி உள்ளது.

கொரோனா ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தில் ஓடும் 30 பாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்ற இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

மதுரை-கொல்லம், விழுப்புரம்-நெல்லை, விழுப்புரம்-புதுச்சேரி, கோவை-கண்ணணூர் ரயில்கள் முக்கியமானவையாகும்.

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களில் இதே போன்ற பாசஞ்சர் ரயில்களையும் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாசஞ்சர் ரயில்களில் மிகக் குறைந்த கட்டணம் தான். இப்போது அந்த ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்படுவதால் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்படும்.

Tags

Related Articles

Back to top button
Close
Close