தமிழகத்தில் ஒரே நாளில் 7000 ஐ நெருங்கும் கொரோனா!-இன்று மட்டும் 6,972 பேருக்கு பாதிப்பு!
சென்னை:
தமிழகத்தில் இன்று மட்டும் 6,972 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,107 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 96,438 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,493,904 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 6,972 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 59,584
இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை 23,83,664
இன்று மட்டும் 88 பேர் கொரானாவினால் பலியாகினர்.
இதுவரை பலி எண்ணிக்கை 3,659 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 4,707 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;1,66,956
இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.