GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது…! 4 மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கு…!
Lockdown in 4 districts
சென்னை:
கொரோனா அதிகம் பாதித்த சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.
சென்னையில் கொரோனாவின் பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது.
இதையடுத்து, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் 30ம் தேதி வரை 12 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்காக சென்னை 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு ஒரு பாகத்திற்கு 4 என்று மொத்தம் 400 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருசக்கர, 4 சக்கர வாகனங்களில் 12 நாட்களுக்கு மக்கள் வெளியே செல்ல முடியாது.
வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவு சென்றாலே போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
சென்னையில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த சென்னையில் மொத்தம் 20 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர்.
செக் போஸ்ட்களில் 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருக்கின்றனர்.