fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு புதிய ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது.

இன்று முதல் சென்னை எழும்பூரிலிருந்து கேரளா மாநிலம் கொல்லத்துக்கு புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள மக்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில் சேவையானது திருச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை போன்ற இடங்களின் வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படுகிறது. இந்த சேவையானது சபரிமலைக்கு செல்லும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த ரெயில் ( எண்.16101) சேவையானது தினமும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு , மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

அதேபோல் மறுபார்க்கத்தில் ரயில் எண் .16102 கொல்லத்திலிருந்து தினமும் காலை 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இன்று பிற்பகல் தர்மபுரி ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் காணொலி காட்சி வழியாக ரயில்வே மந்திரி பியூஸ் கோயல் எழும்பூர்-கொல்லம் விரைவு ரயில் சேவையை பச்சை கொடிகாட்டி தொடங்கிவைத்தார்.

Related Articles

Back to top button
Close
Close