
துபாயில் கட்டடத்தின் 3ஆவது தளத்திலிருந்து குதித்து இந்தியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் பணிபுரிந்து வருபவர் அசோகன் புருஷோத்தமன் வயது (47). இந்தியரான இவர் ஜெபல் அலி பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் 3ஆவது தளத்திலிருந்து குதித்து நேற்று இரவு திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து ஜபல் அலி காவல்துறையினர் விசாரணை நடத்திக்கொண்டு வருகின்றனர்.
அசோகன் புருஷோத்தமன் தற்கொலைக்கு முன்பு தனது காலின் நரம்பு அறுந்திருந்ததாகவும் கூறுகின்றனர்.















