விரக்தி அடைந்த விவசாயி. வீடு சென்று மன்னிப்பு கேட்ட போலீஸ்
தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் 144 அமலில் இருந்த இந்நிலையில் ஊரடங்கை மதிக்காமல் சாலையில் சுற்றியிருப்பவர்களை போலீசார் கடுமையாக தாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அதேசமயம் போலீசாருக்களுக்கு தன் குடும்பத்தை விட்டு தொற்று பரவாமல் இருப்பதற்காக உண்ண சரியான உணவு இல்லாமல் சாலைகளில் படுத்தும் தன் கடமையை செய்து வருவதாகம் உண்மை தான்.
இந்நிலையில்தான் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்த் ஒரு விவசாயிடம் தான் செய்த தவறை எண்ணி மன்னிப்பு கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக காய்கறிகளை வேறு மாவட்டத்திற்க்கு எடுத்து செல்ல முடியாததால் தானாகவே ஒரு வண்டியை தயார் செய்து தன் நிலத்தில் விளைவித்த காய்கறிகளை எடுத்து சென்ற ஒரு இளைஞரை போலீசார் தடுத்து நிறுத்தி ஊடரங்கை மதிக்காமல் வருகிறாய் என்று வாக்குவாதம் நடந்தது. இதனால் கோபமான விவசாயி…
விவசாயி நிலையை அறியாத போலீஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விரக்தி அடைந்த விவசாயி தான் கொண்டுவந்த காய்கறிகளை எல்லாம் நிலத்தில் வீசிவிட்டு சென்றார்.
இதைக்கண்ட போலீஸ்
பின் திருவள்ளுவர் மாவட்ட எஸ்பி அரவிந்த் தன் தவறை உணர்ந்து விவசாயின் வீட்டிற்கே சென்று மன்னிப்பு கேட்டு காய்கறிகளுக்கான பணத்தையும் கொடுத்த சம்பவம், அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக வலமவருகிறது.
இந்த வைரஸ் பாதிப்பால் பல பிரச்சினைகள் வந்தாலும், அங்க அங்கு நடக்கும் நல்ல மனிதாபிமான செயல்களும், உதவும் கரங்களும் அதிகமாக காணப்படுகிறது.
V. NandhiniPrakash