கர்நாடகா மாநிலத்தில் நடுவர் பயிற்சிமுகாம் ..
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். சிலம்பச் செம்மல். ஆர்.முருககனிஆசான் மற்றும் அகில பாரத சிலம்பம் கவுன்சில் பொதுச் செயலாளர். அண்ணாவி. ஜேஈசன்ஆசான் மற்றும் அகில பாரதசிலம்பம்கவுன்சில்பொருளாளர்.ஆசிகை.டி.சண்முகப்பிரியா ஆசான் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் மாநில பொதுச் செயலாளர் ஆஷிகை. ஊர்வசிபோரா ஆசான கலந்து கொண்டு நடுவர் பயிற்சி முகாமை சிறப்பாக நடத்தினர்.இதில் 10க்கு மேற்பட்ட பயிற்சியாளர் கள் கலந்து கொண்டனர். கர்நாடக சிலம்ப பேரவை பொதுச் செயலாளர்.ஆசான். சந்திரசேகர் அவர்கள் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.பயிற்சி முடிந்து அனைவருக்கும் சான்றிதழ்வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் இந்த கல்வி ஆண்டில்(2024-2025) தேசிய போட்டிகர்நாடகாவில் நடத்துவதாகஅகிலபாரதசிலம்பம்கவுன்சில்முடிவெடுத்துள்ளது. கர்நாடகா சிலம்ப பேரவை பொதுச் செயலாளர். சந்திரசேகர் ஆசான் ஒப்புதல்அளித்துள்ளார். அடுத்ததாக நடுவர் பயிற்சி முகாம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நடைபெற உள்ளது என்று பொதுச் செயலாளர். ஜே.ஈசன் ஆசான் தெரிவித்தார்…