Others
டிம்பிள் யாதவ்–நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்..
பிரிவினைவாத அரசியலை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர். பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது; அரசு திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை. பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும் என டிம்பிள் கூறினார். தொடர்ந்து பேசிய டிம்பிள் யாதவ், நாட்டின் அரசியல் சட்டத்துக்கு பாஜக ஆட்சியில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார். தற்போது நடைபெறும் தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான தேர்தலாகும். பொய் பேசுவதில் பாஜகவினர் திறமையானவர்கள் என்பதை புரிந்த மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என கடுமையாக விமர்சனம் செய்தார்.