fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டத்தில் ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து , அவ்வாறு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப்படையினர் இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவ்வாறு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது தீவிரவாதிகள் தீடிரென சுடத் தொடங்கினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் சுப்பாக்கிசூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே சரமாரியாக துப்பாக்கிசூடு நடந்தது.

இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.அவர்களின் வசம் இருந்த ஆயுதங்களும் , பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.சுட்டு கொல்லப்பட்ட இந்த தீவிரவாதிகள் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தற்போது ஜம்முவின் சம்பா பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏ.கே 47 அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close