அமெரிக்காவில் கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு .
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அமெரிக்காவிலும் இந்த வைரஸானது பரவி பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவிலேயே கணக்கிடும் போது கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா அமைந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 884 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5116-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் , 25,200 பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால் , மொத்தமாக பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 2,15,417-ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்க்கையானது இத்தாலி ,ஸ்பெயின் போன்ற நாடுகளை விட குறைவாக இருந்தாலும் இந்த கொரோனா தொற்று உருவான சீன நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்பைவிட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.