டெல்லியின் ஒரு முக்கிய அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து !
டெல்லியில் அமைந்துள்ள ஒரு முக்கிய அரசு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள சிஓஜி வளாகத்தில் பண்டிட் தீன் தயாள் அந்த்யோத்தியா பவன் என்ற கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் இயங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த கட்டிடத்தின் 5-வது மாடியில் தீடிரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சமூக நீதித்துறை அமைச்சக அலுவலகம் அமைந்துள்ள அந்த தளத்தில் ஏற்பட்ட தீயை 24 தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.தற்போது தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் கட்டிடத்தை குளிர்வீக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறு இந்த தீ ஏற்பட்டது என்றும் , இந்த தீயினால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்தும் எந்தவித தகவலும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.