GeneralRETamil NewsTrending Nowஇந்தியாதமிழ்நாடு
புதிய இணையதளத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…! எதற்காக தெரியுமா..?
Chief Minister edapaddi palanisamy opens new website for jobs

சென்னை:
தனியார் வேலைவாய்ப்புக்காக அரசு சார்பில் புதிய இணைய தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
வேலைவாய்ப்புக்காக பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். கொரோனா பாதிப்பால் பலரும் புதிய பணிகளை நாட ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் தனியார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை மக்கள் எளிதில் அணுகும் விதமாக ஒரு புதிய தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற தளத்தில் சென்று விருப்பமான பணிகளை தேடி பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
















