fbpx
RETamil Newsதமிழ்நாடு

அறிஞர் அண்ணா பரிசளித்த மோதிரத்துடனே கருணாநிதி உடல் அடக்கம்!!

முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல், அண்ணா பரிசளித்த மோதிரத்துடனே நல்லடக்கம் செய்யப்பட்டது.

தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று முந்தினம் உடல் நலக்குறைவால் காலமானார். ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடல் சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

அப்போது ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தி.மு.க. தலைவருக்கு அஞ்சலி செலுத்த திரை உலகத்தினர் திரண்டு வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வந்தார்.

1959-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றியது. தி.மு.க. வின் இந்த வெற்றிக்கு அயராது உழைத்தவர் கருணாநிதி. எனவே அறிஞர் அண்ணா அவர்கள், தங்க மோதிரம் ஒன்றை கருணாநிதிக்கு பரிசாக அளித்தார். அந்த மோதிரம் தலைவரின் உடலோடு ஒன்றாகிவிட்டதால் இது வரை ஒரு நாளும் அந்த மோதிரத்தை கழட்டியதில்லை.

சந்தன பேழையில் கருணாநிதியின் உடலோடு அந்த மோதிரமும் சேர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close