GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட மற்றொரு சோகம்…! 9 பேர் பலி
9 migrants dead in bihar in an accident
பாட்னா:
பீகார் மாநிலத்தில் லாரியும், பேருந்தும் மோதிக்கொண்டதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகல்பூர் நாவ்காச்சியாவில் லாரியும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. அதில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது இரும்புக் குழாய்கள் ஏற்றப்பட்ட லாரி, காரிக் காவல் நிலைய எல்லையில் உள்ள அம்போ ஃசவுக் பகுதியில் சென்றது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து ஒன்றின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. விபத்தின் போது லாரியிலிருந்த இரும்புக் குழாய்கள் தொழிலாளர்களின் மீது விழுந்துள்ளன. பெரும் சிரமங்களுக்கு இடையே தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.