GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
நெல்லையில் விடாது துரத்தும் கொரோனா…!ஒரே நாளில் 40 பேருக்கு பாதிப்பு!
Corona cases found in nellai
நெல்லை: நெல்லையில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 71 பேர் பலியாகி இருக்கின்றனர். 10 ஆயிரத்து 108 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். 2,599 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.
இந் நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டத்திலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 60 ஆக மாறி இருக்கிறது. அனைவரும் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர்.