fbpx
Others

*”விஜய்யின் வெற்றியை தடுக்காதே!” – ஈரோட்டில் ஆளுநருக்கு எதிராக கொதித்தெழுந்த காங்கிரஸ்!*

*ஈரோடு | மே 08, 2026*
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற *திரு. விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம்* ஆட்சி அமைப்பதைத் தடுக்கும் வகையில் செயல்படும் ஆளுநரைக் கண்டித்து, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று காலை 11 மணிக்கு கருங்கல்பாளையம் உத்தமர் காந்தியடிகள் சிலை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*தலைமை மற்றும் முன்னிலை:*ஈரோடு மாநகர் மாவட்டத் தலைவர் *பா. ராஜேஷ் ராஜப்பா* தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்டத் தலைவர் *கே.பி. முத்துக்குமார்*, வடக்கு மாவட்டத் தலைவர் *பா. உதயகுமரன்** ஆகியோர் முன்னிலை வகித்தனர்.*முக்கியப் பங்கேற்பாளர்கள்:* முன்னாள் எம்.எல்.ஏ *ஆர்.எம். பழனிசாமி*, முன்னாள் மாவட்டத் தலைவர்களான *எஸ்.வி. சரவணன், ஈ.ஆர். ராஜேந்திரன், ஈ.பி. ரவி, டி. திருச்செல்வம்* ஆகியோர் பங்கேற்று பாசிச பாஜக மோடி அரசின் கைக்கூலியாக செயல்படும் ஆளுநரின் போக்கைக் கண்டித்துப் பேசினர். மேலும் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட துணை அமைப்பு தலைவர்கள் & நிர்வாகிகள், வட்டார,கிராம கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வார்டு தலைவர்கள், பெருந்திரளாகக் கலந்துகொண்டு மத்திய அரசுக்கும் ஆளுநருக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.” *மக்களின் தீர்ப்பை மதித்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆளுநர் ஒத்துழைக்க வேண்டும்” என்பதே இப்போராட்டத்தின் பிரதான முழக்கமாக இருந்தது*.நிகழ்வின் நிறைவாக, இரண்டாம் மண்டலத் தலைவர் *ஆர். விஜயபாஸ்கர்* நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

 

Related Articles

Back to top button
Close
Close