fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்…!

Popular Director who Isolated from Tamil Cinema ...!

சென்னை: பிரபல இயக்குநரான பாரதிராஜா தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் 508 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது சென்னையில் வைரஸ் தொற்றின் பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா சென்னையிலிருந்து தமது சொந்த ஊரான தேனிக்கு சென்றதால் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஓய்வு நேரங்களில் பாரதிராஜா தேனியிலுள்ள தனது வீட்டில் தங்கிச் செல்வது வழக்கம். நேற்று மாலை சென்னையிலிருந்து அவர் தேனி வந்தார். தேனி மாவட்ட எல்லையில் பாரதிராஜாவுக்கு சுகாதாரத் துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. ஆனாலும் சிவப்பு மண்டலப்பகுதியில் இருந்து வந்ததால் வீட்டில் 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி தேனி நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கான நோட்டீஸ் அவரது வீட்டில் ஒட்டப்பட்டது.

Tags

Related Articles

Back to top button
Close
Close