fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

இந்தோனேசியாவில் உள்ள சும்பா தீவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு!!

இந்தோனேசியாவில் அமைந்துள்ள சும்பா என்ற தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் சும்பா கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.29 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருந்தாலும் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளியாக பதிவான இந்த நிலநடுக்கத்தை சும்பா நகரத்தில் வசிக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர்.

இவ்வாறு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்த்ததால் , பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.இந்த நிலநடுக்கத்தால் பாத்து=உப்பு ஏற்பட்டுள்ளதா என்ற தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு டிசன்பர் மாதம் 23-ஆம் தேதி இந்தோனேசியாவில் ஜாவா,சுமத்ரா தீவில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் 430 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close