Others
உச்ச நீதிமன்றம் — வீட்டு பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய சட்டம்
வீட்டு பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில்,‘‘வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா முழுவதும் சட்டம் எதுவும் இல்லை. மேலும் அவர்கள் முதலாளிகளின் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். எனவே, வீட்டு பணியாளர்களுக்கான உரிமையை பாதுகாக்க அத்தகைய சட்டத்தின் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து ஆறு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஒரு நிபுணர் குழுவை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும்.மேலும் அந்த நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், வீட்டு பணியாளர்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் நிலைநாட்ட ஒரு சட்டத்தைக் கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.