தவகெவைச் சேர்ந்த 107 பேரில் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகளா…?
120 எம்எல்ஏக்கள் என்ற பெரும்பான்மை ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றார். தவெக தலைவர் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றதால், அதில் ஒன்றை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 107. எம்.எல்.ஏக்கள்இன்றுதமிழகசட்டசபையில்பதவியேற்றுக்கொண்டனர். தற்போது 233 எம்எல்ஏக்களில் பலர் குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆளும் தவெக முதலிடத்தில் உள்ளது. தவகெவைச் சேர்ந்த 107 பேரில் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் 19 பேர் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற தீவிர வழக்குகளும் நிலுவையில் உள்ளன. திமுக உறுப்பினர்களில் 37 பேர் வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதிமுகவில் 33 பேர், பாமக (4), காங்கிரஸ் (3), விசிக,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (தலா 2) ஆகியோர் மோது குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர் என மொத்தம் 126 எம்எல்ஏக்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில்உள்ளதாகஏடிஆர்அறிக்கைதெரிவித்துள்ளது.இவர்களில்தீவிரவழக்குகளைஎதிர்கொண்டுள்ளவர்களின்விவரங்களும் தெரியவந்துள்ளன. அதன்படி, தவெகவைச் சேர்ந்த 19 பேர், திமுக மற்றும் அதிமுகவில் தலா 14 பேர், பாமக, காங்கிரசில் தலா 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட்,முஸ்லிம்லீக்,அமமுக,தேமுதிகவில்தலாஒருவர்எனதீவிரகுற்றவழக்குகள்உள்ளன.குற்றவழக்குகளில்ஐந்துஅல்லதுஅதற்கும்மேற்பட்டஆண்டுகள்சிறைத்தண்டனைப்பெற்றவர்களும்கொலை,கொலைமுயற்சி,தாக்குதல்,கடத்தல்,பாலியல்வன்கொடுமை,ஊழல்,சிறார்கள்,பெண்களுக்குஎதிரானகுற்றங்கள்ஆகியவைத்தீவிரகுற்றவழக்குகளாகவகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிதாகத் தேர்வான எம்எல்ஏக்களில் 56பேர்தீவிரகுற்றவியல்வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். மேலும், வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களில் 193பேர்ஒருகோடிரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகள் வைத்துள்ளனர். தவெகவின் 107 எம்எல்ஏக்களில் 77 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் தெரியவந்துள்ளது.