சென்னை மாதவரம் தற்காலிக மார்க்கெட்- தனிமனித இடைவெளி எங்கே?
No physical distancing at mathavaram temporary market
சென்னை மாதவரத்தில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பூ,பழம் அங்காடிகள் சென்னை மாதவரத்தில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இயங்கும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவித்தது. இதனை அடுத்து மக்கள் காய்கறிகளை வாங்க முந்தியடித்துக் கொண்டு அந்த மார்கெட்டிற்கு விரைந்து படையெடுக்கின்றனர். சிறு,குறு வியாபாரிகளும் அதிகாலை முதலே தங்களது பொருட்களை விற்க அங்கு விரைந்துள்ளனர்.
மக்கள் அனைவரும் விவசாயிகள் விற்பனை செய்யும் பூ,பழங்கள் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்புகின்றனர். இதனால் மாதவரத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பூ,பழம் அங்காடிகளில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறு தனிமனித இடைவெளியை மக்கள் கடைபிடிக்காததால் தொற்று இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மக்கள் அனைவரும் சூழ்நிலையை புரிந்துகொண்டு,த னிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.