காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு லோக்சபா உரிமை மீறல் குழு நோட்டீஸ் …
மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக பொதுத்தேர்வு திருத்த மசோதா கடந்த மாதம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாகி உள்ளது.இந்நிலையில், இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, விதிகளை பின்பற்றி முன்கூட்டியே நோட்டீஸ் அளிக்காமல், மத்திய அமைச்சர் அமித்ஷாவை, பார்லிமென்ட் மரபுகளுக்கு ஒவ்வொத வகையிலும், இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி காங்கிரஸ் எம்பிராகுல்விமர்சித்ததாகக் கூறி சபாநாயகர் ஓம்பிர்லாவிடம், கடந்த 30 ம் தேதி பாஜ எம்பி அனுராக் தாக்கூர் உரிமை மீறல் புகார் தெரிவித்துள்ளார்.கடந்த 29 ம் தேதி, இந்த மசோதா மீதான விவாதத்தின் போது ராகுல் பார்லிமென்ட் நடவடிக்கைகளுக்கு ஒவ்வாத வார்த்தைகளை பயன்படுத்தியதை கவனத்தில் கொள்ளவேண்டும்என்றுபாஜஎம்பிசஞ்சய்ஜெயிஸ்வால்புகார்தெரிவித்துஇருந்தார்.இந்நிலையில், அனுராக் தாக்கூர் அளித்த நோட்டீசை பரிசீலனை செய்த லோக்சபா உரிமை மீறல் குழு, இது குறித்து வரும் 28 ம் தேதி்க்குள் பதிலளிக்கவேண்டும் எனக்கூறி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.