fbpx
Others

13 வயது சிறுமி 6 மாதம் பாலியல் துஷ்பிரயோகம்…. குண்டூர்

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியின் 13 வயது மகள் அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்தச் சிறுமியின் தாயாரும் சிறுமிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தாய் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்த சிறுமியால் எதுவுமே செய்ய முடியவில்லை.  அந்த சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. இந்த் நிலையில் அந்த கும்பலிடம் இருந்து எப்படியோ தப்பித்த அந்த சிறுமி, குண்டூரில் உள்ள தனது தந்தையிடம் தனக்கு நடந்த இந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்து கூறி அழுதிருக்கிறார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, குண்டூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியில் தொழிலில் தள்ளிய சொர்ணகுமாரி உட்பட அந்த மருத்துவமனை ஊழியர்கள் 21 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை 6 மாதம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், அதன் பிறகு “இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாகவே, சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆந்திர மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 61 போரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விபச்சார கும்பல் தொடர்பாக மேலும் 10 பேரை குண்டூர் மேற்கு மண்டல போலீசார் நேற்று கைது செய்தனர்.
 இதுகுறித்து கூடுதல் எஸ்பி கே.சுப்ரஜா கூறியதாவது:-
குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.
சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக 80 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இதுவரை 74 பேரை போலீசார் கைது செய்துள்ளது.  6 பேரை காணவில்லை.
மொத்தத்தில் 35 பேர் விபச்சார அமைப்பாளர்கள். சிறுமியின் சூழ்நிலையைப் பயன்படுத்தி, பல கும்பல்கள் சிறுமியை விலைக்கு வாங்கி, பல மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கு விபச்சாரத்தில் தள்ளி உள்ளனர் என்று கூறினார்       சென்னையில் மறைமுகமாக பாலியல் வன்கொடுமை நடக்கிறது,          இது பற்றி பல உண்மைகள் விரைவில்…..?

Related Articles

Back to top button
Close
Close