அரியானா, மேகாலயாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…! மக்கள் பீதியில் ஓட்டம்!
Hariyana, Meghalaya receives earthquake
டெல்லி:
ஒரே நாளில் அரியானா, மேகாலயா மற்றும் லடாக்கில் நில நடுக்கம் உணரப்பட்டது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியானாவின் ரோஹ்தக் நகர் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவானது. அரியானாவில் கடந்த 3 நாட்களில் 2-வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மேகாலயாவின் துரா நகரில் இருந்து மேற்கே 79 கி.மீ. தொலைவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் 3.3 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இதேபோல், லடாக்கின் கார்கில் பகுதியில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் ரிக்டரில் 4.5 அலகுகளாக நிலநடுக்கம் பதிவானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, மேகாலயா, லடாக் மற்றும் சத்தீஸ்கர் என கடந்த 4 நாட்களுக்குள் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.