‘பொத்’, ’பொத்’ என்று கீழே விழுந்த ஆயிரம் பேர்…! விசாகப்பட்டினத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
Vishakapattinam chemical factory accident
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள அந்த ரசாயன ஆலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப் பகுதியில் நடந்து சென்ற ஆயிரக்கணக்கானோர் திடீர், திடீரென மயங்கி விழுந்தனர்.
சாலையில் மயங்கி விழுந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கானவர்களுக்கு கண் எரிச்சல் இருப்பதாகவும், 3 கிராம மக்கள் வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது ஊரடங்கு உத்தரவு காரணமாக அந்த ஆலையும் பூட்டப்பட்ட காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் மூச்சுத்திணறல் வாந்தி, தலைவலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆலையில் கசிவு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்த விசாரணையும் தொடங்கி இருக்கிறது.