கொரோனா தொற்று காரணமாக இந்தியா பல விதமான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இந்தியாவின் பொருளாதாரமும் பெருமளவில் சரிந்துள்ளது.
வங்கித்துறைகள் பலவும் மக்கள் தங்களிடம் பெற்ற தொகைகளின் தவணையை செலுத்தும் காலத்தை நீட்டித்துள்ளனர்
.
இந்த வகையில் ரிசர்வ் வங்கியும் வட்டியை திரும்ப செலுத்தும் காலத்தை நீட்டித்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ள ரிசர்வ் வங்கி ,கடன் பெற்றவர்களுக்கு முடிந்த அளவு உதவியை தாங்கள் செய்துவிட்டதாகக் கூறியுள்ளது.
கடன் பெற்றவர்கள் தவணை செலுத்தும் காலத்தை மூன்று மாதங்கள் நீட்டித்து வைத்தது. பின்னர் மேலும் மூன்று மாதங்கள் தள்ளி வைத்ததாகவும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு செய்வது வங்கியில் வைப்புத் தொகையாளர்களின் வட்டிக்கு ஆபத்தானது எனவும் கூறியுள்ளது. வட்டியை கட்டாயமாகத் தள்ளுபடி செய்வது வங்கிகளின் நிதி நம்பகத்தன்மைக்கு ஆபத்தானது எனவும் ரிசர்வ் வாங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.