திருவள்ளூர் — புழல் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் செங்குன்றம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் புழல் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் செங்குன்றம் தனலட்சுமி அரிசி ஆலையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர். வேலூர். இப்ராஹீம்.மாவட்ட துணை தலைவர். மகேந்திரன் மாவட்ட பொதுச் செயலாளர். நரேஷ் குமார் .பேசும் போது மாதவரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து மக்களுக்காக போராட்ட களத்தில் குதிக்க வேண்டும் நம் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்க வேண்டும் ஒவ்வொரு பகுதியிலும் தொண்டர்கள் கடினமாக உழைக்க வேண்டும் .2024 இல் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும்.மூன்றாவது முறை பாரத பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவி ஏற்கும் பொழுது தமிழகத்தின் எம்.பி.க்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெறக்கூடியஅளவிற்குநமதுவெற்றிஅமையவேண்டும்.என்றுபேசினார்கள்.ஜெயசந்திரா. முரளி கிருஷ்ணன். முருககனி. வெங்கடேசன். ரவி. நாகராஜ். வாசுகி. பாரதிய ஜனதாவின் பல்வேறு பிரிவினைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சிலம்பரசன் நன்றி கூறினார்..