போடி–குளிக்க சென்ற கல்லூரி மாணவன்சடலமாக மிதப்பு—தாய் புகார்.
போடி, அக் 5:
போடி சுப்புராஜ்நகர் புது காலனி 3 வது தெருவை சேர்ந்தவர் பிரசாத் இவரது குடும்பதில் மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து க டந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் இவரது பிள்ளைகளான நரேந்திரன், தேஜஸ்கனி இருவரையும் இவரது மனைவி மீனாட்சி (50) தனது பராமரிப்பில் தனியாக கொண்டு வாழ்ந்து வருகிறார்.இதற்கிடையில் இவரது மகன் நரேந் திரன் (20) மதுரை தியாகராஜர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் கடந்த 30 ஆம் தேதி கல்லூரியில் விஜயதசமி விடுமுறை விடப்பட்டதால் போடிக்கு வந்தார்.தொடர்ந்து கடந்த 2ம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியில் சுற்றி விட்டு வருவதாக அம்மாவி டம் கூறி சென்றவர் பின்பு வீடு திரும்ப வில்லை..அதனால் அதிர்ச்சி அடைந்த மீனாட்சி உ றவினர் மற்றும் வெளியில் எல்லாம் தேடியும் எங்கும் கிடைக்காததால் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகார் அடிப்படையில் காணாமல் போன கல்லூரி மாணவரை தேடி வந்தனர்.இதனை அடுத்து நேற்று போடி மேற்கு பகுதியில் உள்ள குரங்கணி கொட்டகுடி ஆற்றுப்பகுதியில் 30 அடி ஆழம் கொண் ட கமலாச்சி கேணியில் ஒரு பிணம் மிதப்பதாக போடி குரங்கணி போலீசருக்கு தகவல் சென்றது. போலீசார் அந்த கேணிக்கு சென்று மிதந்த கிடந்த சடலத் தை மீட்டு போடி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இது குறித்து மீனாட்சி யிடம் தகவல் தெரிவித்து சடலத்தை பா ர்த்த போது காணாமல் போன மகன்என்றார்.