RETamil News
சொத்துவரி செலுத்த மூன்று மாத காலம் அவகாசம்- தமிழக அரசு அறிவிப்பு !

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடுமையாக ஊரடங்கு அமலில் உள்ளது..
இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
தற்பொழுது தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் போன்றவற்றை செலுத்த ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அவகாசம் அளித்துள்ளது.
மார்ச் 31ம் தேதிக்குள் கட்ட வேண்டிய சொத்து வரி போன்றவற்றை செலுத்த மூன்று மாத கால அவகாசம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.















