அமெரிக்காவின் பொருளாதார ஏகாதிபத்தியத்தை நாம் எதிர்க்க வேண்டும்!
ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச அறிவிப்பு, இந்தியாவின் பொருளாதார இறையாண்மைக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகளுக்கு அபராதமாக கூடுதல் வரிகளை விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல், நமது நாட்டின் தேசிய நலன்களுக்கு எதிரான தாக்குதலாகும். இந்த ஏகாதிபத்திய நடவடிக்கையை நாம் எப்படியேனும் எதிர்த்து வெற்றி பெற வேண்டும்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்பு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார விவகாரங்களில் அமெரிக்காவிடமிருந்து முன்னுரிமை பெறலாம் என்று இந்தியா எதிர்பார்த்திருந்த நிலையில், பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட அனைத்து முக்கிய சர்வதேச விவகாரங்களிலும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்கு இணங்க இந்திய அதிகாரிகள் முயற்சித்தனர். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோதிலும், அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக இந்த வரியை அறிவித்துள்ளது.டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், தங்கள் நாட்டை வர்த்தக பங்காளிகள் தங்கள் பொருட்களை “திணித்து” ஏமாற்றுவதாகக் குற்றம்சாட்டுகிறது. அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் மிகக் குறைவாக இருப்பதாகவும், வர்த்தக சமநிலையை தங்களுக்கு சாதகமாக்க அதிக வரிகள் விதிப்பது அவசியம் என்றும் அவர்கள்
வாதிடுகின்றனர். ஆனால், உண்மை இதற்கு மாறானது. அமெரிக்கா தனது சொந்த விருப்பத்தின் பேரில் இறக்குமதி செய்கிறது; எந்த நாடும் அவர்கள் மீது எதையும் திணிக்கவில்லை. உலக வர்த்தகத்தில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் அமெரிக்க டாலரில் நடைபெறுவதால், அது உலகளாவிய வர்த்தகத்தில் மேலாதிக்கம் செலுத்துகிறது. இதன் மூலம், அமெரிக்கா தனது அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை மற்ற நாடுகள் மீது திணிக்கிறது. வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தனது உலகளாவிய மேலாதிக்கத்திற்கான ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறது. மற்ற நாடுகளின் உள்நாட்டு கொள்கைகள், தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய தலைவர்கள், மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளில் கூட அவர்கள் தலையிடுகின்றனர்.இந்த அழுத்தங்களுக்கு இந்தியா பெருமளவு இணங்க முயன்றது. சீனாவைத் தனிமைப்படுத்துவதற்காக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட QUAD கூட்டணியில் அமெரிக்கத் தலைமையை இந்தியா ஏற்றுக்கொண்டது. ஆனால், இத்தகைய அடிபணிந்த கொள்கைகள் இந்தியாவுக்கு எந்தப் பலனையும் தரவில்லை. தெற்கு நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டணி இப்போது பலவீனமடைந்துள்ளதால்,இந்தியாதனிமைப்படுத்தப்பட்டநிலையில்உள்ளது.அமெரிக்காவின் நோக்கங்களின் குற்றவியல் தன்மை மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. உதாரணமாக, பிரேசில் மீது 50 சதவீத வரியை டிரம்ப் அறிவித்துள்ளார், ஏனெனில் பிரேசில் அமெரிக்காவின் உத்தரவுகளை ஏற்க மறுத்துவிட்டது. பிரேசில் ஜனாதிபதி லூலா, அமெரிக்க அழுத்தங்களுக்கு தனது நாடு அசையாது என்று உறுதியாகக் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி
போல்சனாரோவுக்கு எதிரான குற்றவியல் விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று டிரம்ப்கோரியுள்ளார். இதேபோல், ரஷ்யாவுடனான வர்த்தகத்தைக் காரணம் காட்டி இந்தியாமீதுஅபராதவரிகளைவிதிப்பதாகவும்,உக்ரேனியமக்களைஆதரிப்பதாகவும் டிரம்ப் கூறுகிறார். ஆனால், வெள்ளை மாளிகையில் உக்ரேனிய ஜனாதிபதிஜெலென்ஸ்கியை சந்தித்தபோது, உலக ஊடகங்கள் முன்னிலையில் அவரை அவமதித்தவர் இவரே என்பது இதன் பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்துகிறது.எனவே, அமெரிக்காவின் இத்தகைய அழுத்தத் தந்திரங்களுக்கு இந்தியா இடமளிக்க மறுக்க வேண்டும். இவற்றுக்கு இணங்குவது இந்தியாவின் தேசிய நலன்களை கடுமையான ஆபத்தில் தள்ளும். நமது ஏற்றுமதி வணிகங்கள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம், சில பொருளாதார சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால், நமது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பது எப்போதும் முதன்மையானது. உலகளாவிய மிரட்டலுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்பது நமது கடமையாகும். -பி.எம்.காம்ப்ளே தேசிய துணைத் தலைவர், SDPI