இங்கிலாந்து போறீங்களா…? 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் கட்டாயம்..!
New Quarantine plans for UK arrivals
லண்டன்:
இங்கிலாந்து வருபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அந்நாடு அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த உத்தரவை உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு அறிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதை தடுக்க முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி வெளி நாடுகளில் இருந்து ஜூன் 8 முதல் இங்கிலாந்து வருபவர்கள் 14 நாட்கள் தாங்களாகவே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
இது கட்டாயம் ஆகும். அரசின் இந்த உத்தரவை கடைபிடிக்காதவர்களுக்கு ஆயிரம் பவுண்ட்கள் அபராதம் விதிக்கப்படும். சுய தனிமைப்படுத்தலுக்கு ஆட்படுபவர்கள் அவ்வவ்பொழுது அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடல்நிலை தொடர்பான தகவல்களை கூற வேண்டும்.
இந்த விதிமுறைகள் அயர்லாந்து நாட்டில் இருந்து வருபவர்களுக்கும், மருத்துவம், விவசாய பணிகளை மேற்கொள்வோர்களுக்கு பொருந்தாது. அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.