குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி யாருக்கு..?

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக நாடாளுமன்ற செயலாளரிடம் சுதர்சன் வெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில்(VicePresidentElection)இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி(SudarsanReddy) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக நாடாளுமன்ற செயலாளரிடம் சுதர்சன் வெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கதலின்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சரத் பவார் , பிரியங்கா காந்தி, திருச்சி சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் 2025 ஜூலை மாதம் ராஜினாமா செய்தார். உடல்நலக் காரணங்களால் அவர் ராஜினாமா செய்ததாக அறிவித்தார். இதனை தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதனை அடுத்து, ஆளும் என்டிஏ மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டனர். அதன்படி, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்ரா ஆளுநரும், தமிழகத்தைச்சேர்ந்தபாஜகமூத்ததலைவருமானசி.பி.ராதாகிருஷ்ணன்அறிவிக்கப்பட்டார்.அதேநேரத்தில்,எதிர்க்கட்சிகூட்டணிவேட்பாளராகஓய்வுபெற்றநீதிபதிசுதர்சன்ரெட்டிஅறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கானவேட்புமனுதாக்கல்2025ஆகஸ்ட்22ஆம்தேதியுடன்முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் திரும்ப பெறுவதற்கான கடைசிநாளாகும்.இந்தநிலையில்தான்,குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.அப்போது, ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, திருச்சி சிவா எம்பி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். முன்னதாக, 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான நேற்று என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். துணை ஜனாதிபதி தேர்தலில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். துணை ஜனாதிபதியைத்தேர்ந்தெடுக்கவாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடைபெறும்.2025செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மைஉள்ளது. எனவே, ஆளும் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.