திருவள்ளூர்-பீலி கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரிஆலய செய்தி
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட மொண்டியம்மன் நகர் அருள்மிகு. பீலி கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயத்தின் 58 ஆம் ஆண்டு பங்குனி உத்திர தீமிதி திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது .12 நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் .எஸ். சுதர்சனம் அவர்கள் தலைமையில் தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது . ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான முறையில் தீமிதி திருவிழா நடைபெறுகிறது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டு பூக்குழி இறங்குகின்றனர். ஆலய அறங்காவலர் குழு தலைவர்மீ .வே. கருணாகரன் ஆலய விழா குழு தலைவர் புண்ணிய சேகரன் மற்றும் சன் முனியாண்டி ஞானப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.