fbpx
Others

விக்கிரவாண்டி– இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது…

விக்கிரவாண்டிசட்டப்பேரவைதொகுதிஇடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுதொடங்கியது.இந்தவாக்குப்பதிவுமாலை6மணிவரைநடைபெறுகிறது.விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து,இத்தொகுதிக்குஇடைத்தேர்தல்அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு தாக்கல் நடந்தது. 24-ம்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து, 26-ம் தேதிஇறுதிவேட்பாளர் பட்டியல்வெளியிடப்பட்டது.அதிமுகபோட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில்உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றன.பொதுமக்கள்வரிசையில்நின்று ஆர்வத்துடன்வாக்களித்துவருகின்றனர்.இத்தேர்தலில் 1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 42 மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 13ஆம் தேதி நடக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close