புதுடெல்லி 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்திருந்தது. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுககு தேவையான உணவு, தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வதற்காக பஸ்கள் என பல்வேறு வேலைகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. இந்த நிலையில், 224 தொகுதிகளிலும் சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் சுமார் ரூ.440 கோடியை செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு தொகுதிக்கு மட்டும் ரூ.1.96 கோடியை தேர்தல் ஆணையம் செலவு செய்திருக்கிறது.கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.394 கோடி செலவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கர்நாடகாவின் காங்கிரஸ் தேர்தல் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தேர்தல் ஆணையத்தற்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில் தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கர்நாடக தேர்தலில் பயன்படுத்தப்பட்டது குறித்தும், அதுவும் மறுமதிப்பீடு மற்றும் மறு சரிபார்ப்பு செயல்முறையை மேற்கொள்ளவில்லை. எனவே, கர்நாடக தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயக்கம் மற்றும் கர்நாடக தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். தென்னாப்பிரிக்காவிற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒருபோதும் அனுப்பவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. அந்த நாட்டில் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை தென்னாப்பிரிக்காவின் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் எளிதாக சரிபார்க்க முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. “எனவே, தென்னாப்பிரிக்கா தேர்தல்களில் அல்லது உலகில் எங்கும் பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தக்கூடிய எந்தவொரு இயந்திரத்தையும் கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் பயன்படுத்தவில்லை என்று கூறி உள்ளது. “கர்நாடகா தேர்தல், 2023 இல் பயன்படுத்தப்படும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரகளும் அனைத்தும் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள். இந்த உண்மை காங்கிரஸ் கட்சிக்கு நன்றாகவேத் தெரியும்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் எந்த நாட்டிலிருந்தும் வாக்குப்பதிவு எந்திரம் இறக்குமதி செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஒரு தேசிய அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.யின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளது என தேர்தல் ஆணையம் கூறியது, “ஆதாரங்களை’ நம்பி காங்கிரஸ் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதிலும் வாக்கெடுப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன் இதுபோன்ற கேள்விகளும் சந்தேகங்கள் எழுப்புவதும் கவலையளிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது.
Read Next
Others
10 hours ago
தேனி மாவட்டம்– ஆட்சியரின் கவனத்திற்க்கு..?
Others
10 hours ago
நீடாமங்கலம் வர்த்தக சங்கசெயற்குழு கூட்டம்..
10 hours ago
இரண்டு சக்கர வாகனங்களை கண்மூடித்தனமாக,ஓட்டிச் செல்லும்அவலநிலை..?
10 hours ago
தேனி மாவட்டம்– ஆட்சியரின் கவனத்திற்க்கு..?
10 hours ago
நீடாமங்கலம் வர்த்தக சங்கசெயற்குழு கூட்டம்..
11 hours ago
(சிஏஏ) முதல்முறையாக 300 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்..
20 hours ago
அமைச்சர் அமித்ஷா–பாஜக தனிப்பெரும் கட்சியாக 5 தென் மாநிலங்களிலும்உருவெடுக்கும்..
20 hours ago
அரவிந்த் கெஜ்ரிவால்–‘இந்தியா’ கூட்டணியா – பா.ஜ.க.வா … பிரசாரம்..
21 hours ago
ராகுல்காந்தி–பா.ஜனதாஅரசியலமைப்புச் சட்டத்தைகிழிக்க விரும்புகிறது…
1 day ago
ஆந்திராவில் விடிய விடிய நடந்த வாக்குப்பதிவு
1 day ago
கார்கே-இண்டியா கூட்டணி 4 கட்ட தேர்தலுக்குப் பிறகு வலுவாக உள்ளது.
1 day ago
ராகுல்-“விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை டெம்போ பணம் பெற்றீர்கள்?”
Related Articles
மோடி வேட்புமனு தாக்கல்—மற்ற செய்திகளுடன்…
2 days ago
பழைய மின்மாற்றிகளை மாற்ற மின்வாரியம் முடிவு…
2 days ago
41 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்.
2 days ago