Others
புதுச்சேரி–பிற மாநிலங்களிலும் ரேஷன்கார்டு பெற்றிருந்தால் நீக்கப்படும்…..!
புதுச்சேரி அரசு குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன்கார்டு பெற்றுள்ளவர்களில் சில குடும்ப உறுப்பினர்கள், பிற மாநிலங்களிலும் ரேஷன்கார்டு பெற்றுள்ளதாக இந்த துறையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ரேஷன்கார்டு விவரங்கள் மற்றும் பெயர் இந்த துறையின் https://dcsca.py.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படப்பட்டுள்ளது. அவ்வாறு முறைகேடாக பிற மாநிலங்களிலும் ரேஷன்கார்டுகளில் இடம் பெற்ற பெயர்களை 15 நாட்களுக்குள் நீக்கி அதற்கான ஆதாரங்களை இந்த துறையில் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்த ரேஷன்கார்டுகளில் இருந்து அவர்களின் பெயர் நீக்கப்படும். மேலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.