எல்லாம் நீங்களே பாத்துக்குங்க…! உங்க கையில் தான் இருக்கு…! ஏன் சொன்னார் எடப்பாடி..?
Chief minister edapaddi palanisamy meeting
சென்னை: மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதார துறை செயலாளர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கண்ணுக்கு தெரியாத வைரஸ் எளிதாக பரவும் என்பதை தொடர்ந்து கூறி வருகிறோம். ஏழை, எளிய மக்களுக்கு அத்யாவசிய தேவைக்கான பொருட்கள் கிடைக்கவும் அரசு வழிவகைகளை செய்துள்ளது.
ரேசன் கடைகள் வழியே, விலையில்லா அரிசி, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை கடந்த ஏப்ரலில் வழங்கப்பட்டது. ஜூன் மாதத்திலும் இந்த பொருட்களை மக்கள் பெற்று கொள்ளலாம்.
அதனால் தமிழகத்தில் உணவு பஞ்சம் என்பது ஏற்படவில்லை. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முதலில் ரூ.1,000 மற்றும் அரிசி, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை வழங்கினோம்.
இதன்பின்னர் மீண்டும் ரூ.1,000 அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அம்மா உணவகங்கள் வழியே மக்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கி வருகிறோம் என்று கூறினார்.