fbpx
RETamil News

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விடமாட்டோம் – ராகுல் காந்தி பேட்டி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தின் வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் , அப்போது அவர் கூறியதாவது;

நாங்கள் ஆட்சியில் வந்தால் 10 நாட்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என உறுதி அளித்திருந்தோம். அதன் அடிப்படையில் எப்போது மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 6 மணி நேரத்திற்குள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். மூன்றாவதாக ராஜஸ்தான் மாநிலத்திலும் மிக விரைவில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் அனைத்து விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யும் வரை நாங்கள் பிரதமர் மோடியை தூங்க விடமாட்டோம் என்றும் மோடியின் அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் 2019-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினால் விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படு என்றும் நான் உறுதி அளிக்கின்றேன்.

ரியலன்ஸ் தலைவர் அணில் அம்பானி உட்பட 15 பெரிய பிரமுகர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.ஆனால் கடந்த 41/2 ஆண்டுகளாக விவசாயிகள் இன்னல்களை போக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர் கட்சியும் மக்கள் பக்கம் உள்ளனர். எவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

Related Articles

Back to top button
Close
Close