fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல்..! இசட் பிளஸ் பாதுகாப்புக்கு நடவடிக்கை!

Z plus security needed for Tamilnadu chief minister

சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உளவுப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மத அடிப்படைவாதிகள் மற்றும் தமிழினவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் என்று அவர்கள் கூறி உள்ளனர். முதலமைச்சருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை பலப்படுத்த சேலம், கோவை, திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் 24, 25, 26 தேதிகளில் சேலம், கோவை திருச்சி ஆகிய நகரங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார்.

அதன் காரணமாக, சென்னை உள்பட 11 மாவட்டங்களிலும் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 நகரங்களிலும் அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் பங்கேற்கிறார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு 26ம் தேதி சென்னை திரும்புகிறார்.

பாதுகாப்பை தீவிரப்படுத்த செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம். நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், திருச்சி ஆகிய மாவட்ட எஸ்.பி-க்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close