மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறப்பு..! முதலமைச்சர் எடப்பாடி அறிவிப்பு
Mettur dam open on june 12th says chie minister edapadi palanisamy
சென்னை:
ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் ஆண்டு தோறும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். தென்மேற்கு பருவ மழை துவங்கும் காலத்தை கணக்கிட்டு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலை இருந்தது.
ஆனால் ஒரு கட்டத்தில் அந்த பருவ மழையால் அணை நிரம்பிய பிறகே, மேட்டூரில் நீர் திறக்கப்படும் சூழல் உருவானது. இந் நிலையில் இந்த ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் டெல்டா மாவட்ட அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தீவிர ஆலோசனைக்கு பின்னர், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையானது ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.