Others
பழனி அருகே டிராக்டர் திருட்டு வழக்கில் 3 பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அக்கமநாயக்கன்புதூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் செங்கல் சூளையில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை மர்ம நபர்கள் திருடி சென்றது தொடர்பாக பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு தாண்டிக்குடி, மஞ்சள்பரப்பு கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார்(38), மருதுபாண்டி(34) பட்டிவீரன்பட்டி பகுதியை சேர்ந்த ஆனந்த்(36) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.இவர்கள் 3 பேரும் பல்வேறு மாவட்டங்களில் டிராக்டர்களை திருடி விற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.