fbpx
REவிவசாயம்

கோழிகளுக்கு மண் குளியல் மற்றும் கரையான் உற்பத்தி செய்வது எப்படி?

மண்குளியல் என்றால் என்ன?

கோழிகள் மண்ணில் சிறிய குழி பறித்து, அதில் படுத்துக்கொண்டு இறக்கை முழுவதும் மண்ணில் படுமாறு படுத்து புரளும்.

இதனால், கோழிகளின் உடல் மேலே உள்ள செல்கள் உதிர்ந்துவிடும். இது நாட்டுக்கோழிகளின் வழமையான பழக்கம்.

இதற்காகப் பண்ணைகளில் ஆங்காங்கே சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி, அதில் அடுப்புச் சாம்பலைக் கொஞ்சம் கொட்டி வைத்தால் போதும்.

கோழிகள் அந்தக் குழிகளில் இறங்கி, மண் குளியல் எடுத்துக்கொள்ளும்.

இதன்மூலமாக செல்,மற்றும் உண்ணிகள் போன்றவற்றால் கோழிகளுக்கு ஏற்படும் நோய்களின் பாதிப்புகள்  குறையும்.

கரையான் உற்பத்தி செய்வது எப்படி?

கறையானில் உள்ள புரதச்சத்து, கோழிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

செம்மண் நிலங்களில் காய்ந்த குச்சிகள், கட்டைகள், மட்டைகள் ஆகியவற்றை ஆங்காங்கே கொட்டி வைத்து, அதன்மீது சிறிது தண்ணீர் தெளித்து வந்தால், அதில் கறையான்கள் உருவாகும்.

செம்மண் நிலம் இல்லாதவர்கள், பழைய பேப்பர்களைக் கிழித்து, ஒரு மண்பானையில் அடைத்து, அதில் லேசாகத் தண்ணீர் தெளித்து, பானையைக் கவிழ்த்து வைத்தால் போதும், ஓரிரு நாள்களில் கறையான்கள்  உற்பத்தியாகிவிடும்.

இதை கோழிகள்  உணவாக எடுக்கும்போது முட்டை உற்பத்தி திறன் அதிகரிப்பதோடு உடல் எடையும் வெகுவாக அதிகரிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close