fbpx
OthersREதமிழ்நாடு

மழைக்கு வாய்ப்பு-நாளை உருவாகின்றது ஆம்பன் புயல்!!

chances for heavy rain- aamban cyclone

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது நாளை புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 17 ஆம் தேதிக்கு பிறகு வளைந்து வடக்கு வடகிழக்கு திசையில் நகரும். இதனால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பு காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது.

கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் லட்சத்தீவு குமரி கடல்,தென் கிழக்கு அரபி கடல்,மத்திய மற்றும் தெற்கு கடல் உள்ளிட்டப் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close